வீரயுக நாயகன் வேள்பாரி by Su.Venkatesan (Author) by சு.வெங்கடேசன் (Author)
My rating: 5 of 5 stars
இது போன்றதொரு அதிசிறந்த படைப்பை என் வாழ்நாளில் நான் வாசித்ததில்லை. ஒவ்வொரு பக்கமும் மயிர்க் கூச்செரியும் வண்ணம் சு.வெ அவர்களால் வடிக்கப் பட்டுள்ளது.
முதல் பாகத்தில் நிறைய “குல” விளக்கங்கள் இருந்தன. ஆனால், இதில், முதல் பக்கம் பற்றி எரிய ஆரம்பிக்கும் கதை இறுதி வரை தொடர்ந்தது.
போர்க் காட்சிகள் மட்டுமே முக்கால் பாகம் கொண்ட ஒரு புத்தகம் இதுவே. அதையும் மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார் ஆசிரியர். அவரது புனைவுக்கும் தமிழ் ஆளுமைக்கும் இனி நான் அடிமை. எவ்வளவு நுட்பமான கதை, நம்பகமான பாத்திரங்கள்!
பாரி, கபிலர், தேக்கன், முடியன், உதிரன், நீலன், பொற்சுவை, காலம்பன், கொற்றன், கீதானி, இராவதன் – இவர்களை எல்லாம் விட்டு மனம் எதார்த்த வாழ்விற்கு வருவதே பெரும் பாடு!
வேள்பாரி வாசிக்க அனைவருக்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
This is the first time in my life I am struggling with the deficiency of stars. This book deserves 10/5 stars if I have to be honest and the writer deserves all the literary awards this world has.
A brilliant thriller. An epic saga! Velpari and the people in this book are going to haunt anybody who reads for years to come!
View all my reviews
Tag: சு.வெங்கடேசன்
புத்தக விமர்சனம்: சு.வெங்கடேசனின் வேள்பாரி 1
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி by Su. Venkatesan
My rating: 5 of 5 stars
This is the first time ever, I feel the stars are not enough. I want to give this book 10 stars out of 5. It is that good!
என்ன சொல்ல? எங்கிருந்து தொடங்க?
சு.வெங்கடேசன் கண்முன் இருந்தால் அவரது கைகளுக்குள் என் முகத்தைப் புதைத்து நன்றி கோருவேன்.
வேள்பாரி – தொகுதி 1, அதி சிறப்பான ஒரு புனைவு. இது சாத்தியமா என்று வியக்க வைக்கும் அளவிற்கு அக்கால மக்களின் வாழ்க்கை நிலை, முக்கியமாக அறம், இவற்றை எல்லாம் எப்படி சுத்த தமிழில் தந்துள்ளார் என்று வியந்து வியந்து வாசித்தேன்.
இது ஒரு காலத்தால் அழிக்க முடியாத தமிழ்ப் பொக்கிஷம்.
ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கண்முன் எழுந்து உயிர்ப்போடு சுற்றி வருவது அந்த காலத்துக்கே நன் சென்று விட்டேன் என்று சான்று கூறியது.
கபிலரின் வருகை – அடடே! சிலிர்த்தது. பாரியின் நுழைவோ நாம் படங்களில் கண்டு ரசித்த காட்சிகள் எல்லாம் தோற்றுவிடும். நீலன், மயிலா, அங்கவை, தேக்கன், பழையன், காலம்பன் என இவர்கள் உடன் பயணம் செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
கொற்றவைக் கூத்து, பாண்டிய சூழ்ச்சி என கதையின் போக்கு வாரிக் கொண்டு போனது.
இரண்டாம் பாகம் தொடங்க அதிக ஆவலோடு உள்ளேன்.
Such a brilliant narrative in fluent Tamil – loved every bit of the first part!
View all my reviews