புத்தக விமர்சனம்: சு.வெங்கடேசனின் வேள்பாரி 2

வீரயுக நாயகன் வேள்பாரி by Su.Venkatesan (Author) by சு.வெங்கடேசன் (Author)

My rating: 5 of 5 stars


இது போன்றதொரு அதிசிறந்த படைப்பை என் வாழ்நாளில் நான் வாசித்ததில்லை. ஒவ்வொரு பக்கமும் மயிர்க் கூச்செரியும் வண்ணம் சு.வெ அவர்களால் வடிக்கப் பட்டுள்ளது.

முதல் பாகத்தில் நிறைய “குல” விளக்கங்கள் இருந்தன. ஆனால், இதில், முதல் பக்கம் பற்றி எரிய ஆரம்பிக்கும் கதை இறுதி வரை தொடர்ந்தது.

போர்க் காட்சிகள் மட்டுமே முக்கால் பாகம் கொண்ட ஒரு புத்தகம் இதுவே. அதையும் மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார் ஆசிரியர். அவரது புனைவுக்கும் தமிழ் ஆளுமைக்கும் இனி நான் அடிமை. எவ்வளவு நுட்பமான கதை, நம்பகமான பாத்திரங்கள்!

பாரி, கபிலர், தேக்கன், முடியன், உதிரன், நீலன், பொற்சுவை, காலம்பன், கொற்றன், கீதானி, இராவதன் – இவர்களை எல்லாம் விட்டு மனம் எதார்த்த வாழ்விற்கு வருவதே பெரும் பாடு!

வேள்பாரி வாசிக்க அனைவருக்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

This is the first time in my life I am struggling with the deficiency of stars. This book deserves 10/5 stars if I have to be honest and the writer deserves all the literary awards this world has.

A brilliant thriller. An epic saga! Velpari and the people in this book are going to haunt anybody who reads for years to come!



View all my reviews